Archives: மே 2020

சுலபமாகச் செய்கிறது

என்னுடைய தந்தையும் நானும் மரங்களை வெட்டவும், அவற்றைச் சரியான அளவில் துண்டுகளாக்கவும், இருவர் பயன் படுத்தை கூடிய, குறுக்கே வெட்டும் ரம்பத்தை பயன் படுத்துவோம். நான் இளைஞனாகவும், ஆற்றல் மிக்கவனாகவும் இருப்பதால் எளிதில் ரம்பத்தை வெட்டுக் குழியில் திணித்து விடுவேன். “எளிதாகச் செய்கின்றது, ரம்பம் அதன் வேலையை செய்யட்டும்” என்பார் என்னுடைய தந்தை.

பிலிப்பியருக்கு பவுல் எழுதிய வார்த்தைகளை நான் நினைத்துப் பார்த்தேன். “தேவனே…..செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராய் இருக்கிறார்” (2:13). எளிதாகச் செய்ய முடியும். அவர் நம்மை மாற்றுகின்ற வேலையை செய்யட்டும். கிறிஸ்து கூறியுள்ளவற்றை நாம் வாசிப்பதையும், செயல் படுத்துவதையும் காட்டிலும் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கிறது என்று சி.எஸ். லுவிஸ் கூறியுள்ளார். “ ஓர் உண்மையான கிறிஸ்து என்ற நபர்,  உனக்குள் காரியங்களைச் செயல் படுத்தி,…… உன்னை நிரந்தரமாக ……கிறிஸ்துவைப் போல மாற்றி…… தன்னுடைய வல்லமையையும், மகிழ்ச்சியையும், அறிவையும்  நித்திய வாழ்வையும் பகிர்ந்து கொள்கின்றார்” என்று அவர் கூறுகின்றார்.

இத்தகையச் செயலைத் தான் தேவன் இன்று செயல் படித்திக் கொண்டிருக்கின்றார். இயேசுவின் பாதத்தில் அமர்ந்து, அவர் சொல்வதை கவனித்துக் செயல் படுத்து, ஜெபி. “தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்” (யூதா 1:21), நீங்கள் அவருக்கேச் சொந்தம் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். அவர் உங்களை மாற்றுகின்றார் என்ற உறுதியில் அமைதியாக காத்திருங்கள்.

“நீதியின் மேல் பசியும் தாகமும் நமக்குள்ளதா?”  என்று கேட்டுக் கொள்ளுங்கள். ஒரு சிறு குழந்தை உயரத்தில் வைக்கப் பட்ட பரிசுப் பொருளை பெற்றுக் கொள்ளும்படி, அதன் கண்கள் ஆவலோடு மின்னுவதை உண்ர்ந்த அதன் தந்தை, அப்பரிசு பொருளை எடுத்து அக்குழந்தைக்கு கொடுப்பதைப் போல எண்ணிக்கொள்.

அது தேவனுடைய வேலை, மகிழ்ச்சி நம்முடையது. எளிதாகச் செய்யப்படும். ஒரு நாள் நாமும் அங்கிருப்போம்.

என்ன வேண்டுமானாலும் செய்

சமீபத்தில் வெளியான ஒரு ஆங்கிலப் படத்தில், தன்னை மேதை என்று கூறிக்கொள்ளும் ஒருவர், கேமராவிற்கு முன்பாக நின்று கொண்டு, “ திகில், ஊழல், அறியாமை, வறுமை” ஆகியவை வாழ்க்கையை தேவனற்றதாகவும், அபத்தமாகவும் மாற்றுகிறது என்று மார்த்தட்டி பேசுகின்றார். நவீன திரைப்பட வசனங்களில் இது ஒன்றும் புதியதல்லவெனினும், இதில் ஆர்வத்தைத் தருவது என்னவென்றால், இது எங்கே கொண்டு செல்கிறது என்பதே. இறுதியில் முன்னணி நடிகர் பார்வையாளர்களை நோக்கி, எது உங்களுக்கு சிறிதேனும் மகிழ்ச்சியைத் தருகின்றதோ அதைச் செய்யுமாறு வருந்திக் கேட்கின்றார். அவனைப் பொருத்தமட்டில், பாரம்பரிய அறநெறியையும் விட்டு விடும்படி கேட்கின்றான்.

ஆனால், “என்ன வேண்டுமானாலும் செய்” என்பது சரிப்படுமா? பழைய ஏற்பாட்டிலுள்ள பிரசங்கியை எழுதியவர், வாழ்க்கையில் திகிலின் மத்தியில் விரக்தியைச் சந்தித்த அவர், இவ்வகை காரியத்தை அநேக ஆண்டுகளுக்கு முன்பே முயற்சித்திருக்கின்றார், உலக இன்பங்களின் வாயிலாக சந்தோஷத்தை தேடியிருக்கின்றார் (பிர.2:1,10). மிகச் சிறந்த கட்டுமான வேலைகள் (வ.4-6), செல்வம் (வ7-9), தத்துவங்களை ஆராய்தல் (வ12-16) என பல காரியங்களின் வாயிலாக தேடினார். அவருடைய தீர்வு என்ன? “எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது” (வ.17) என்கின்றார். இவை ஒன்றுமே மரணத்தையும், அழிவையும், அநியாயத்தையும் மேற்கொள்ளக் கூடியவையல்ல (5:13-17).

ஒரேயொரு காரியம் மட்டும் தான் பிரசங்கியை எழுதியோனை விரக்தியிலிருந்து மீட்டது. நம்முடைய வாழ்விலும், வேலையிலும் தேவன் பங்களிக்கும் போதுதான், நம்வாழ்வின் சோதனைகளின் மத்தியிலும் நிறைவைக் காணமுடியும். “மனுஷன் புசித்துக் குடித்து, தன் பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதும்………..தேவனுடைய கரத்திலிரு    ந்து வருகிறது” (2:24). வாழ்க்கை சில வேளைகளில் அர்த்தமற்றதாகத் தோன்றலாம், ஆனால், “உன் சிருஷ்டிகரை நினை” (12:1). வாழ்க்கையைக் கண்டுபிடிக்கும் படி உன் வாழ்நாளை வீணாக்காதே, “தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக் கொள்” (வ.13).

தேவனை நம் வாழ்வின் மையமாக வைக்க வில்லையெனின், வாழ்வின் இன்பங்களும், துயரங்களும் ஏமாற்றத்தில் கொண்டு போய் விடும்.

நிலவைப் படைத்தவர்

விண்வெளி வீரர்கள், தங்களின் விண்வெளிக்கலத்தின் ஈஹிள் என்ற பகுதியை நிலவின் அமைதி கடல் பகுதியில் இறக்கிய போது, நீல் ஆம்ஸ்ராங், “மனிதன் எடுத்து வைக்கும் ஒரு சிறிய எட்டு, மனிதகுலத்திற்கு ஓர் இராட்சத எட்டு ஆகும்” என்றார். அவர் தான், நிலவில் நடந்த முதல் மனிதன் ஆவார்.  இவரைத் தொடர்ந்து மற்ற விண்வெளி வீரர்கள் நிலவில் காலடிவைத்தனர், அவர்களில் அப்பொல்லோவின் கமாண்டர் ஜெனி செர்னன் என்பவரும் ஒருவர். “நான் அங்கேயிரு   ந்தேன், பூமியே நீ அங்கே இயங்கிக் கொண்டிருக்கின்றாய், நான் வியப்பில் மூழ்கின்றேன், ……இது ஏதோ ஒரு விபத்தில் ஏற்பட்டதாக இருக்க முடியாது, அது எத்தனை அழகாக இருக்கின்றது!” என்று செர்னன் கூறினார். மேலும், “ உன்னையும், என்னையும் காட்டிலும் பெரியவர் ஒருவர் இருக்க வேண்டும்” என்றார். ஆழமான வழிமண்டலத்திலிருந்து அவர்கள் கண்ட விசித்திரமான காட்சி, அவர்களைச் சிந்திக்க வைத்தது, பரந்து விரிந்த அண்டத்தின் அளவைப் பார்க்கும் போது, தாங்கள் எத்தனை சிறியவர்கள் என்பதை உணர்ந்தனர்.

இந்த பூமியையும் அதற்கும் மேலானவற்றையும் படைத்து, அவற்றைக் காத்து வருகின்ற தேவனுடைய மிகப் பெரிய தன்மையை வியந்து காண்கின்றார் எரேமியா தீர்க்க தரிசி. இவையெல்லாவற்றையும் படைத்தவர், தன்னுடைய ஜனங்களுக்கு அன்பையும், மன்னிப்பையும், நம்பிக்கையையும் வழங்கி, தன்னுடைய நெருக்கத்தை நமக்கு காண்பிக்கின்றார் (எரே.31:33-34). “சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும், சந்திர நட்சத்திர நியமங்களை இராவெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவர்” (வ.35), நம்மைப் படைத்தவர், சர்வ வல்ல தேவன், தம்முடைய படைப்புகள் எல்லாவற்றையும் ஆளுகை செய்கின்றார், அவர் தன்னுடைய ஜனங்களை மீட்டுக் கொள்ள கிரியை செய்கின்றார் (வச. 36-37).

மேலே இருக்கின்ற வானங்களை அளக்கவும், கீழே இருக்கின்ற பூமியின் அஸ்திபாரங்களை ஆராயவும் நம்மால் ஒரு போதும் கூடாது. ஆனால் நாம் இந்த உலகத்தின் விரிந்த தன்மையை பார்த்து வியந்து, இவை எல்லாவற்றையும், நிலவையும் படைத்த தேவனை வியப்போடு பார்ப்போம்.

நன்கு அளக்கப் பட்டது

ஸ்டெல்லா, ஒரு நாள், ஒரு பெட்ரோல் நிரப்பும் மையத்தில் ஒரு பெண்ணைச் சந்திக்கின்றாள், அவள் தன்னுடைய வீட்டில் வங்கி அட்டையை விட்டு விட்டு வந்திருந்தாள். தன்னுடைய குழந்தையோடு, தனித்து விடப்பட்டவளாய், அங்கு வருபவர்களிடம் உதவி கேட்டாள். அந்நேரத்தில் வேலையில் இல்லாதிருந்தும், ஸ்டெல்லா அவளுக்கு ரூபாய் 500 செலவளித்தாள், அறிமுகமில்லாத அப்பெண்ணுடைய வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்ப உதவினாள். அநேக நாட்களுக்குப் பின், அவள் வீட்டிற்குத் திரும்பிய போது, ஒரு பரிசுக் கூடையில் சிறுவருக்கான விளையாட்டுப் பொருட்களும், மற்றும் சில பொருட்களும் அவளுடைய வீட்டின் தாள்வாரத்தில் காத்திருந்தது. அந்த அறியாத நபரின் நண்பர்கள், ஸ்டெல்லாவின் இரக்கத்தை, மறக்கமுடியாத கிறிஸ்மஸ் பரிசுகளின் மூலம், அவளுடைய 500 ரூபாயை ஆசிர்வாதமாக மாற்றியுள்ளனர்.

இருதயத்தை மகிழ்விக்கும் இந்த கதை, இயேசு கூறிய, “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப் படும்” (லூக். 6:38) என்ற வார்த்தைகளை நினைவு படுத்துகின்றது.

இதைக் கேட்கும் போது, நமக்கும் கொடுக்கும் போது என்ன கிடைக்கும் என்பதில் கவனம் செலுத்த தோன்றும், ஆனால் அப்படிச் செய்யும் போது, நாம் கொடுத்தலின் உண்மையை இழந்து விடுவோம். இயேசு இந்த வார்த்தைகளைக் கூறுவதற்கு முன்பு, “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மை செய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாய் இருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே” (வ.35) என்று கூறியுள்ளார்.

நாம் பொருட்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக கொடுப்பதில்லை; நாம் கொடுக்கின்றோம், ஏனெனில், தேவன் நம்முடைய தாராள ஈகையில் பிரியமாயிருக்கின்றார். நாம் பிறர்மேல் செலுத்தும் அன்பு, தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பைக் காட்டுகின்றது.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

சேவை மனப்பான்மை

எனது "மாமா" மோகன் காலமானபோது, ​​​​பலர் பலவகையான அஞ்சலிகளைச்  செலுத்தினர். இருப்பினும் அந்த இறுதி மரியாதைகள் அனைத்தும் ஒன்றையே மையமாகக் கொண்டிருந்தன; மோகன் பிறருக்குச் சேவை செய்வதன் மூலம் தேவன் மீதான தனது அன்பைக் காட்டினார். இரண்டாம் உலகப் போரின்போது அவர் நிராயுதபாணியாகப் போர்க்களம் சென்று அங்கே மருத்துவ பணியாற்றினார், இதுவே அவரது சேவை மனப்பான்மைக்கு இணையற்ற உதாரணம்.  தனது துணிச்சலுக்காக இராணுவத்தின் உயர்ந்த கெளரவங்களைப் பெற்றார், ஆனால் மோகன் போரின் போதும், அதற்குப் பின்னரும், தனது இரக்கமுள்ள சேவைக்காகவே மிகவும் நினைவுகூரப்பட்டார்.

மோகனின் தன்னலமற்ற தன்மை, கலாத்தியருக்கு  பவுல் எழுதியதை நினைவூட்டுகிறது:"சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்" (கலாத்தியர் 5:13) என்றெழுதினார்.  ஆனால் எப்படி? நாம் உடைந்திருக்கையில், பிறரைக் காட்டிலும் நமக்கே முன்னுரிமை கொடுக்க தூண்டப்படுகிறோம். எனவே இந்த இயற்கைக்கு மாறான தன்னலமற்ற தன்மை எங்கிருந்து வருகிறது?

பிலிப்பியர் 2:4-5ல் பவுல், “அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவகளையும் நோக்குவானாக.கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது” என்று ஊக்கமளிக்கிறார். கிறிஸ்து நம்மீதுள்ள அதீத அன்பால் சிலுவையில் மரணத்தைக் கூட அனுபவிக்கத் தயாராக இருந்ததை பவுல் விவரிக்கிறார். அவருடைய ஆவியானவர் கிறிஸ்துவின் மனதை நம்மில் உண்டாக்கும்போது மட்டுமே, நாம் பிரித்தெடுக்கப்பட்டு பிறருக்காகத் தியாகம் செய்ய இயலும். அது இயேசு நமக்காக தம்மையே கொடுத்தபோது செய்த அதீத தியாகத்தைப் பிரதிபலிக்கும். நம்மில் உள்ள ஆவியானவரின் கிரியைக்கு நாம் அடிபணிவோமாக.

 

சங்கடங்களும் ஆழமான விசுவாசமும்

சனிக்கிழமை காலை வேதவகுப்பின் போது, ​​ஒரு அப்பா தனது அன்பான , திசைமாறிய மகள் ஊருக்குத் திரும்பியதால் பதற்றமடைந்தார். அவளுடைய நடத்தை காரணமாக, வீட்டில் அவளுடன் சங்கடத்துடனே இருந்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லை, நீண்ட கால நோய் மற்றும் முதுமையின் தாக்கம் அதிகம் வாட்டத் துவங்கின. பல மருத்துவர்களிடம் பல முறை சென்றது குறைந்த பலனையே அளித்தது. அவள் மனம் தளர்ந்தாள். தேவனின் நடத்துதலின்படி, அன்று படித்த வேதபகுதி மாற்கு - 5 அவளுக்கு நம்பிக்கையும், மகிழ்ச்சியும் அளித்தது.

மாற்கு  5:23 இல் வியாதிப்பட்டிருந்த பிள்ளையின் தகப்பனான யவீரு, "என் குமாரத்தி மரண அவஸ்தைப்படுகிறாள்" என்று தத்தளித்தான். அச்சிறுமியைப்  பார்க்கச் செல்லும் வழியில், பேரெழுதப்படாத ஒரு பெண்ணின் நீண்டகால உடல்நலக் குறையை  இயேசு குணப்படுத்தினார். "மகளே உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது" (வ.34) என்றார். யவீருவும் அந்தப் பெண்ணும், இயேசுவின் மீதான விசுவாசத்தால் உந்தப்பட்டு அவரைத் தேடினர், அவர்கள் ஏமாற்றமடையவில்லை. ஆனால் இரண்டு சம்பவங்களிலும், இயேசுவைச் சந்திக்கும் வரை,  அவ்விருவரின் காரியங்களும்  இன்னும் மோசமாகிக்கொண்டே இருந்தது.

வாழ்க்கையின் சங்கடங்களுக்குப் பாகுபாடு கிடையாது. ஆண்,பெண், வயது,  இனம் ,வர்க்கம் என்ற எந்த பேதமும் இன்றி ,நாம் அனைவரும் குழப்புகிற, விடை தேடி அலைகிற  சூழல்களை எதிர்கொள்கிறோம். பிரச்சனைகள் நம்மை  இயேசுவிடமிருந்து பிரிக்குப்படிக்கு அனுமதிப்பதற்கு மாறாக, நாம் அவரைத் தொடும்போது அதை உணருகிறவரும் (வ. 30) நம்மை குணப்படுத்துகிறவருமாகிய அவரில் நமது விசுவாசத்தை வைக்கும்படி உந்தப்படுவதற்கு முயல்வோம்.

 

இயேசுவை எதிர்பார்த்தல்

என் தோழன் செல்வா, தனது குளிர்சாதனப்பெட்டியைப் பழுதுபார்ப்பவரின்  வருகைக்காகக் காத்திருக்கையில், அந்த நிறுவனத்திலிருந்து குறுஞ்செய்தி ஒன்றைப் பெற்றார். அதில், “இயேசு வந்துகொண்டிருக்கிறார், சுமார் 11:35 மணிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றிருந்தது. பழுதுபார்ப்பவரின் பெயர் உண்மையில் ஜீசஸ் (இயேசு) என்பதைச் செல்வா விரைவில் கண்டுகொண்டார்.

ஆனால் தேவனுடைய குமாரனாகிய இயேசு எப்போது வருவார் என்று எதிர்பார்க்கலாம்? அவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மனிதனாக வந்து நம்முடைய பாவத்தின் தண்டனையை அனுபவித்தபோது, ​​அவர் திரும்பி வருவார் என்று கூறினார். ஆனால் அவர் திரும்பி வருவதற்கான  "அந்த நாளையும் அந்த நாழிகையையும்" பிதா மட்டுமே அறிவார் (மத்தேயு 24:36). நமது இரட்சகர் மீண்டும் பூமிக்கு வரும் தருணத்தை நாம் அறிந்திருந்தால், நமது அனுதின முன்னுரிமைகளில் எத்தகைய வித்தியாசம் ஏற்படும்? (யோவான் 14:1-3).

"நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்" (மத்தேயு 24:44) என்று தனது வருகைக்காக ஆயத்தப்படும்படி இயேசு எச்சரித்தார். "உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்" (வ. 42) என்று நமக்கு நினைப்பூட்டினார்.

கிறிஸ்து திரும்பும் நாளில், நம்மை எச்சரிப்பதற்கு நமது அலைபேசியில் தகவலைப் பெற மாட்டோம். எனவே, நம் மூலம் செயல்படும் ஆவியானவரின் வல்லமையின் மூலம், ஒவ்வொரு நாளும் நித்தியத்தின் கண்ணோட்டத்துடன் வாழ்ந்து, தேவனுக்கு ஊழியம் செய்வோம். அவருடைய அன்பு மற்றும் நம்பிக்கையின் செய்தியைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்வோம்.